காசா: முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை தற்போது எதிர்கொண்டு வருவதாக ஹமாஸ் தலைவர் யாயா சின்வர் முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கம், கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் இயக்கத்தினர் வீதி வீதியாகச் சென்று இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அதன் தலைவர் யாயா சின்வர் என கூறப்படுகிறது. அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு முதன்முறையாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஹமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம், கடுமையான, முன் எப்போதுமில்லாத போரை எதிர்கொள்கிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையை நசுக்கும் பாதையில் அல் கஸ்ஸாம் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் ஹமாஸ் ஒருபோதும் அடிபணியாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TkSXEVW
via IFTTT

Post a Comment

Previous Post Next Post