
புதுடெல்லி: இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை கத்தார் அரசு கடந்த ஆண்டு கைது செய்துசிறையில் அடைத்தது. அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் கடந்தஅக்டோபர் மாதம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்துஇந்திய அரசு கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்தச் சூழலில், டிசம்பர் 1-ம்தேதி காலநிலை மாற்றம் தொடர்பாக துபாயில் நடைபெற்ற சிஓபி28உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியும் சந்தித்துப் பேசினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lwC9vkQ
via IFTTT
إرسال تعليق