மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவ் பகுதிக்கு அருகில் சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி இரவு 08:07 மணி அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனை EMSC உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியை சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சுனாமி அபாயம் தற்போது கடந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் சில இடங்களில் காணப்பட்டதாக தகவல். சுமார் 63 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hTfgG9c
via IFTTT

Post a Comment

Previous Post Next Post