காசா: மத்திய காசாவில் உள்ள மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய காசாவில் உள்ள மகாசி அகதிகள் முகாம் (Maghazi refugee camp) மீது இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய இஸ்ரேலிய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இன்று காலை வரை தொடர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LExQOvB
via IFTTT
Post a Comment