பிரேக்: செக் குடியரசின் பிரேக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இந்தப் படுகொலையில் ஈடுபட்டது ஒரு மாணவர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. அவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக அந்நாட்டு உள் துறை அமைச்சர் விட் ரகூசன் கூறுகையில், “மக்கள் போலீஸாருடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன். குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். இருப்பினும் வளாகம் முழுவதும் போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QJXcno5
via IFTTT
Post a Comment