வெலிங்டன்: சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலமும், பாடி பில்டருமான ரேஷெல் சேஸ் உயிரிழந்தார். 41 வயதான அவரது திடீர் மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர் உயிரிழந்த தகவலை அவரது மூத்த மகள் உறுதி செய்துள்ளார்.

உடற்பயிற்சி மற்றும் தன்னந்தனி பெண்ணாக தனது குழந்தைகளை வளர்ப்பது குறித்து உத்வேகம் அளிக்கும் வகையிலான பதிவுகளை ரேஷெல், சமூக வலைதளங்களில் பதிவு செய்வது வழக்கம். அவரை ஃபேஸ்புக் தளத்தில் மட்டுமே சுமார் 1.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வந்தனர். கடந்த 2015-ல் ரேஷெல், விவாகரத்து பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qnszH7W
via IFTTT

Post a Comment

أحدث أقدم