டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் எல்லைப் பகுதியில் புகை மூட்டம் மூண்டுள்ளது. இது தொடர்பாக காணொளி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சில இடங்களில் தீ பிடித்து எரிவது போலவும் உள்ளது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்திருந்தது. இந்த தாக்குதல் தொடர்ந்தால் லெபனானை அழிப்போம் என அண்மையில் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பிலும் மோதல் தீவிரமடைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jdlLVI8
via IFTTT

Post a Comment

Previous Post Next Post