கீவ்: இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் தோல்வி அடைந்ததுபோல் ரஷ்யா தோல்வி அடையும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கீவ்வில் உள்ள இரண்டாம் உலகப் போர் போர் நினைவு சின்னம் அருகே நடந்த நிகழ்வில் ஜெலன்ஸ்கி பேசும்போது, “நாஜிக்களை போலவே நவீன ரஷ்யா மீண்டும் கொண்டு வரும் பழைய தீமைகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும். அப்போது நாங்கள் ஒன்றாகத் தீமையை அழித்ததைப் போலவே, இப்போதும் அதேபோன்ற தீமையை நாங்கள் ஒன்றாக அழித்துக் கொண்டிருக்கிறோம். இரண்டாம் உலகல் போரில் நாஜிக்கள் தோற்கடிப்பட்டதை போல ரஷ்யாவும் தோற்கடிக்கப்படும். இங்கு நடந்த சித்தரவதைகள், கொலைகள் அனைத்திற்கும் ரஷ்யாவே பொறுப்பு. இதற்கெல்லாம் எங்களின் சுதந்திரம் மூலம் பதில் அளிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WJuPFTq
via IFTTT

Post a Comment

Previous Post Next Post