தெஹ்ரான்: மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. இந்த நிலையில், தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ஈரான் - சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரு நாடுகளுக்கு இடையேயான வெறுப்பை மறந்து பரஸ்பர உறவை மேம்படுத்த சீனா அரசியல் தூதராக மாறியது உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

முன்னதாக, ஈரான் முன்னாள் அதிபர் ஹசன் ரவ்ஹானி ஆட்சியில் இருக்கும்போது சவுதியுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தற்போது ஈரானி அதிபராக உள்ள இப்ராஹிம் ரைசி தொடர்ந்து வருகிறார். அதன் ஓர் அங்கமாக, இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களை மீண்டும் திறப்பதாகவும், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LDUQS2Y
via IFTTT

Post a Comment

Previous Post Next Post