
ஜகர்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த ஆண்டே ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து தலைநகரை மாற்றும் பணியில் இந்தோனேசிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்தரா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், தலைநகர் மாற்றப்படும் முடிவை சூழலியல் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தலைநகர் மாற்ற நடவடிக்கையால் போர்னியோ தீவில் காடழிப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் தேசிய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முகமையின் தரவுகளின்படி, புதிய தலைநகருக்கான மொத்த நிலப்பரப்பு சுமார் 256,143 ஹெக்டேர் (சுமார் 2,561 சதுர கிலோ மீட்டர்) என அளவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நுசந்தாரா நகரத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் அமைச்சகங்களும், அரசாங்க நிறுவனங்களும் இடம்பெயரும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி தொடர்வதாக தெரிவித்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SNIha9z
via IFTTT
Post a Comment