ஏமன் போர் குறித்து சவுதிக்கு எதிராக லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதனால் 48 மணி நேரத்துக்குள்ளாகத் தங்கள் நாட்டிலிருந்து லெபனான் தூதர் வெளியேற வேண்டும் என்று சவுதி தெரிவித்துள்ளது.
லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி உள்நாட்டுச் செய்தி நிறுவனத்துக்கு நேர்காணல் ஒன்றில் பேசும்போது, ஏமனில் சவுதி செய்யும் போர் அர்த்தமற்றது. அந்தப் போரை சவுதி நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு சவுதி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் லெபனான் - சவுதி உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3msuhZN
via IFTTT
إرسال تعليق