டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “ஏஒய்.4.2 வைரஸ் தொற்றின் வீரியம் குறித்து அறிய தொடர் ஆய்வக முடிவுகள் நடத்தப்படுகின்றன. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டெறியப்பட்டுள்ளது. இதில் 93% தொற்று பிரிட்டனில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து உருவான மற்ற 20 வைரஸ்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். கடந்த வாரத்தில் 4% கரோனா தொற்று உலக அளவில் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GDkwjq
via IFTTT

Post a Comment

Previous Post Next Post