கொலம்பியாவில் கடந்த25 ஆண்டுகளாக மாபெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் டைரோ அன்டோனியோ உசுகா (50). இவர் ஒட்டோனெயில் என்றே பரவலாக அறியப்படுகிறார். தனது இளம் வயதில், கொலம்பியாவுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர், 1990-களில் கிளர்ச்சிப் படைகள் அரசால் ஒடுக்கப்பட்டன.

இதையடுத்து, அன்டோனியாவுக்கு போதைப்பொருள் கடத்தலில் ஆர்வம் ஈடுபட்டது. தொடக்கத்தில், மிகச்சிறிய அளவிலான போதைப்பொருட்களை கைமாற்றி வந்த அன்டோனியா, ஒருகட்டத்தில் சர்வதேச அளவில் போதைப்பொருட்களை கடத்தும் அளவுக்கு சென்றார். 'கல்ஃப் க்ளான்' என அழைக்கப்படும் அவரது குழு 2005-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலாக உருவெடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BbBfGD
via IFTTT

Post a Comment

Previous Post Next Post