பிரான்ஸைச் சேர்ந்தவர் 80 வயது சேவியர் பாகெட். இரண்டு ஆண்டுகளாக இவருடைய மிகச் சிறந்த தோழனாக இருக்கிறது ஒரு வெள்ளைப் புறா. இவர் எங்கு சென்றாலும் புறாவும் கிளம்பிவிடும். சைக்கிளில் கடை வீதிக்குச் சென்றால் அவரின் தொப்பி மீது அமர்ந்துகொண்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதைப் புரிந்துகொண்டு நடப்பது இந்தப் புறாவின் சிறப்பாக இருக்கிறது!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சேவியரும் புறாவும் சந்தித்துக்கொண்டனர். தோட்டத்தில் சேவியர் நடந்துகொண்டிருந்தபோது, மரத்திலிருந்த கூட்டிலிருந்து பொத்தென்று ஒரு புறா குஞ்சு கீழே விழுந்தது. மிகச் சிறிய குஞ்சு. இறக்கைகள் முளைக்கவில்லை. அதனால் பறக்க இயலவில்லை. வலியோடு கண்களை உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. சற்று தூரத்தில் பசியோடு ஒரு பூனை காத்துக்கொண்டிருந்தது. சேவியருக்கு ஏனோ புறாவைக் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை. வீட்டுக்குள் சென்றுவிட்டார். தன் மனைவியிடம் ஒரு புறா குஞ்சு கீழே விழுந்திருப்பதையும் அது பூனைக்கு இரையாக இருப்பதையும் சொன்னார். உடனே அவர் மனைவி புறா குஞ்சைக் காப்பாற்றும்படிக் கேட்டுக்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dwGisr
via IFTTT
إرسال تعليق