பிலிப்பைன்ஸில் தென் மாகாணமான சிகாயன் டி ஓரோ நகரில் இன்று ராணுவ விமானம் தரையிறங்கும்போது, திடீரென தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 17 பேர் பலியானார்கள். இடிபாடிகளில் இருந்து 40 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் டெல்பின் ரோலன்ஜானா கூறுகையில், ''அமெரிக்க விமானப் படை எங்களுக்கு உதவியாக வழங்கிய சி-130 ஹெர்குலஸ் வகை விமானம்தான் இன்று விபத்துக்குள்ளானது. சுலு மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி நகரான பதிகுல் என்ற நகர் அருகே இருக்கும் பங்கால் கிராமத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2V1L1M9
via IFTTT
إرسال تعليق