அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ சிரிய எல்லை பகுதியில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 10-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் பலியாகினர். அமெரிக்காவின் தாக்குதலை எங்கள் முன்கூட்டியே அறிவித்ததா என்று எங்களால் கூற முடியாது. நாங்கள் தொடர்ந்து சிரியாவில் நிலைமையை கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NHBrL9
via IFTTT

Post a Comment

أحدث أقدم