டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தக் கோரி காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக டெரோன்டோ நகரில் வசிக்கும் சீக்கியர்கள் அல்லாத மற்ற இந்தியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர்களை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுவரை 11 சுற்றுப்பேச்சு நடத்தியும் எந்த உறுதியான முடிவும் இல்லை. கடந்த மாதம் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. டெல்லி செங்கோட்டையில் புகுந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்கள் அமைப்பின் கொடியை ஏற்றினர். இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MrqCMB
via IFTTT

Post a Comment

Previous Post Next Post