கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கிய சவூதி அரேபியாவுக்கு பிரதமர் இம்ரான் கான் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார். கஷ்டமான காலங்களில் எங்களோடு இருக்கும் சவுதி அரேபியாவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது.
ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 150 ரூபாய் என்ற அளவில் சரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CnbK6F
via IFTTT

Post a Comment

Previous Post Next Post